தொடர்ச்சியாக 10 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்.


இன்று (13/09/2020) மனிதநேய ஈருருளிப்பயணம் Germany நாட்டின் எல்லையில் இருந்து ஆரம்பமாகி  Saarbrücken மாநகரத்தினை வந்தடைந்து மக்கள் சந்திப்பும் நடைபெற்றது.  நாளை (14/09/2020)  Saarbrücken மாநகரசபையில் காலை 9 மணி அளவில் முதல்வரினை சந்திந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி மனுவும் கையளிக்கப்பட இருக்கின்றது, அதனைத்தொடர்ந்து   France நாட்டினுள் காலை  10 மணிக்கு உள்நுளைந்து பல அரசியற் சந்திப்புக்களையும் மேற்கொள்ள இருக்கின்றார்கள் மனிதநேய ஈருருளிப்பயணப் போராளிகள்.  

எவ்விடர் வரினும் எம் இலக்கினை நோக்கி நிச்சயம் எம் பயணம் தொடரும். 


« தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் »









கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.