மேலும் 111 இலங்கையர்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பினர்!
வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 111 இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய டுபாயில் இருந்து 22 பேரும், கட்டாரில் இருந்து 52 பேரும், ஜப்பானில் இருந்து 30 பேரும், அவுஸ்ரேலியாவில் இருந்து 07 பேரும் இன்று(வெள்ளிக்கிழமை) இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பி வருகின்றனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை