மஞ்சள் தூள் அடங்கிய 62 கொள்கலன்கள் தடுத்தவைப்பு .


 மஞ்சள் தூள் அடங்கிய 62 கொள்கலன்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். மஞ்சள் தூள் இறகுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த கொள்களன்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 1,023,859 கிலோகிராம் எடைகொண்ட 760 மில்லியன் ரூபாய் பெறுமதியான மஞ்சள் தூள் கொண்ட கொள்கலன்லே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 818 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கட்டைகளுடன் இருவர் மன்னார் வங்காளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.