காந்தள் அனுசரணையில் மாபெரும் மென்பந்து சுற்று போட்டி


சுதந்திரக் கிண்ணத்திற்கான சுதந்திரம் விளையாட்டு கழகம் தங்கள் கிராமத்தில் உயிர் நீர்த்த உறவுகளின் ஞபகார்த்தமாக வருடம் தோறும் நடாத்தும் மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டியானது  2020 இவ் ஆண்டும் மிக பிரமண்டமான முறையில் நடாத்துவதற்கு காந்தள் புலம்பெயர் உறவுகளின் பரிய நிதி பங்களிப்பில் சுதந்திர களகத்தின் தலைவர் தலமையில் அமைப்பின் செயலாளர், பொருளாளர் ஆலோசகர்  மத்திய குழு உறுப்பினர்கள், ஏனைய உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. 


 அதற்கு அமைவாக ஆரம்ப கட்ட வேலைகள் யாவும் நிறைவுற்ற நிலையில். போட்டிக்கான நாட்களும் இன்று குறிக்கப்பட்டுள்ளது. 


இந்த மாதம் எதிர்வரும் சனி மற்றும் ஞயிறு  19,20 ஆகிய இரு தினங்களிலும் போட்டியானது நடைபெறும். என அமைப்பின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறி  உள்ளனர்.


 கடந்தகாலங்களில் மிகவும் போராட்டத்திற்கு மத்தியில் ஒவ்வரு ஆண்டுதோறும் இந்த விளையாட்டு நிகழ்வானது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிட தக்கது. இம்முறை காந்தள் புலம்பெயர் இழையோர் எம்மோடு இணைந்து நிதி உதவி வழங்குவதால் ஓர் அழவிற்கு எமது செயற்பாடுகளை இலகுவாக முன்னெடுக்க அமைந்தது.


 இந்த புலம்பெயர் உளவுகளால்  இலங்கை தாயக பூமி எங்கும் கணவனை இழந்த பெண்கள். வறுமை கோட்டில் வாழும் மக்கள், வறுமையில் கல்விகற்கும் மணவர்கள், யுத்த வடுக்களை தாங்கி பயணிக்கும் மக்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள் என பல்தரப்பட்ட உறவுகளையும் இவர்களது நிதி அன்பளிப்பால் முன்னேற்றி வருவதனை நாம் அறிவோம். அதன் பொருட்டே இவர்களிடம் பண உதவி வேண்டி நின்றோம் அதற்கு இணங்க அவர்கள் எம்மால் கேட்கப்பட்ட பண உதவியினை வழங்க முன் வந்ததும் இல்லாமல் உடன் ஆரம்ப கட்ட வேலைக்காகவும் ஒரு தொகை பணத்தினை அனுப்பி இருந்தனர். ஆகவே பண உதவி வழங்கிய உறவுகளுக்கு எமது கிராம மக்கள் சார்பாகவும் சுதந்திரம் விளையாட்டு கழகம் சார்பாகவும். 

நிகழ்வின் ஏற்பாட்டு குளுவாகிய நாம் மனமார்ந்த நன்றி கூறுவதுடன். இவ்வாண்டு உலகேயே அச்சுறுத்தி வரும் கொடிய நோய்யான கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் தங்கள் வாழ்வை முன்னெடுக்கும் காந்தள் புலம்பெயர் இளையோரின் உடல் ஆறோக்கியத்திற்காகவும் நாம் பிராத்திக்கின்றோம். 


 எதிர் வரும் சனி மற்றும் ஞயிறு ஆகிய இரு தினங்களிலும் எம்மால்  நடாத்தப்படும் சுதந்திரக் கிண்ணத்திற்கான விளையாட்டு நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பித்து பெறுமதியான பணப்பரிசில் மற்றும் கிண்ணத்தை வென்றெடுக்க ஏனைய விளையாட்டு கழக வீரர்களை  அன்போடு அளைக்கின்றோம். அப்பிளாந்துறை சுதந்திரம் விளையாட்டு கழகத்தினர். இடம். சுதந்திர விளையாட்டு கழக தற்காலிக மைதானம் அம்பிளான்துறை


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.