’20’ இற்கான முழு பொறுப்பையும் ஏற்றார் ஜனாதிபதி!!

 


அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கான முழு பொறுப்பையும் தான் ஏற்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் அமைச்சரவைக்கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று(புதன்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.


இதன்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தை உருவாக்கியது யார், அதற்கான பொறுப்பை யார் ஏற்பது என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிவந்த நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.