தந்தையின் வியாபாரத்திற்கு உதவியாக நின்ற 12 வயது சிறுவனை மோதிக் கொன்ற கார்

 





வீதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்த சிறுவன் மீது கார் மோதியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் நேற்று மாலை மட்டக்களப்பு தேற்றாத்தீவு யூதா தேவாலய முன்றலில் இடம்பெற்றுள்ளது. 


சம்பவத்தில் காத்தான்குடியை சேர்ந்த 12வயது சிறுவனே உயிரிழந்துள்ளான்.  தனது தந்தையுடன் வியாபாரா நடவடிக்கைக்காக வருகை தந்த குறித்த சிறுவன், யூதா ததேயு தேவாலயத்தின் முன்பு வியாபாரத்திற்காக, முச்சக்கர வண்டி சாரதியுடன் உரையாடிக் கொண்டிருந்த போது மட்டக்களப்பு நோக்கி வருகை தந்த கார் சிறுவனை மோதியுள்ளது.குறித்த விபத்தின்போது சிறுவன் ஸ்தலத்திலே உயிரிழந்தான். 


இதன்போது முச்சக்கரவண்டியும் சேதத்துக்குள்ளாகியதுடன் காரும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.