பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட புதையல் தோண்டிய 8 பேர் கைது!
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அரபாநகர் பகுதியில் புதையல்தோண்டமுற்பட்ட 8பேரை கைதுசெய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்றுகாலை 9.30 மணியளவில் அரபாநகர் பகுதியிலுள்ள காணியொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாக பூவரசங்குளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் 8 பேரை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கொழும்பு,வவுனியா உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படும் மண்வெட்டி உட்பட சிலபொருட்களையும், இரண்டு சொகுசுகார்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களுள் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றி வருவதாக தெரிவித்த பொலிசார்,அவர்கள் அனைவரும் நாளையதினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை