உந்துருளி விபத்து - பயணம் செய்த ஐவருக்கும் காயம்!!
திருகோணமலை – மஹதிவுல்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று சிறுவர்கள் உட்பட இரண்டு பெண்கள் காயம் அடைந்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை (04) இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர், மஹதிவுல்வெவ பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிய மூன்று சிறார்களையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்ற போது மாடு குறுக்கே பாய்ந்துள்ளது. இதனால், மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மூன்று சிறுவர்களும் இரண்டு பெண்களும் காயமடைந்தனர்.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பெண்ணும் அவரது சக நண்பரும் மூன்று சிறுவர்களும் படுகாயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
காயமடைந்த இரண்டு பெண்களும் சிறுவன் ஒருவரும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்னர் எனவும், இதேவேளை இரண்டு சிறுவர்கள் சிறு காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்றுள்ளனர் எனவும் அறியமுடிகின்றது.
அத்துடன் இவ்விபத்தில் கோமரங்கடவல – கல்யாணபுர பகுதியைச் சேர்ந்த தினேசிகா (வயது-38) சசிகலா (வயது-24) மற்றும் 6 வயதுடைய சிறுவர் ஒருவனுமே மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் மோட்டார் சைக்கிளில் மூன்று சிறுவர்களை ஏற்றி சென்றமை தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை