மட்டு.வில் மக்கள் குடியிருப்பினுள் சருகுபுலி நுழைந்தது!!

 


மட்டக்களப்பு- பெரியகல்லாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் பொதுமக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்த சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.


இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற சருகுபுலியானது அண்மைக்காலமாக விபத்துகளில் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.


நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு, மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் பெரியகல்லாறு பகுதியில் விபத்தில் சிக்கிய சருகு புலியொன்று மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்ததினால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.


இவ்விடயம் தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து,


அங்குவந்த அதிகாரிகள் மற்றும் பிரதேச இளைஞர்களின் ஒத்துழைப்புடன் குறித்த சருகு புலி பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.