மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலை-சுதத் சமரவீர
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த விடயம் தொடர்பாக இலங்கையும் அதிக கவனம் செலுத்த வேண்டுமென தொற்று நோய் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதுவிடின், கடந்த மாதங்களைப் போன்று மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படுமென அந்தப் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதனை கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவுஸ்ரேலியா மற்றும் நியுஸிலாந்து போன்ற கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்திய நாடுகளில்கூட மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு, ஊரடங்கு வரை செல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகவும் இந்த நிலமையில் சிறிய தீவான எமது நாட்டில் எவ்வித பாதுகாப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை