போலித்தேன் விற்றவர்கள் பொலிஸில் சிக்கினர்!!

 


மன்னார் வீதியில்,  நல்ல தேன் வாங்க முடியும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து விடாதீர்கள்.

 தேன் விற்பனை தொடர்பில் மன்னார் வீதியில்  இன்று இடம்பெற்ற சம்பவம் ஒன்று. 


மடு தேவாலயத்திற்கு செல்லும் பாதை எங்கும் தேன் என ஏமாற்றி விற்கப்பட்ட போலி தேன் போத்தல்கள் இன்று அழிக்கப்பட்டது.


கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 குழுக்களாக பிரிந்து விற்பனையில் ஈடுபட்ட இவர்கள் மெனிக்பாம், வவுனியாவை சேர்ந்தவர்கள் எனவும்,


கோதுமை மா, சிற்றிக் அசிட், சீனி மற்றும் தேன் இந்நான்கையும் கலந்து குறித்த பதத்தில் காய்ச்சி இவ்வாறு போத்தல்களில் அடைக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டதன் பின்னர்,


இவர்களது வயதினை மனதிற் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் வழக்கு தொடராமல் அனைத்து போலித் தேனும் அழிக்கப்பட்டது.


இதன்போது பொலீசார் மற்றம் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.