இன்று புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து கேட்கும் நடவடிக்கை!

 


புதிய கல்வி கொள்கையை அமுல்படுத்துவது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், பேராசியர்களின் நிலைப்பாடு குறித்து நிபுணர் குழு இன்று (வியாழக்கிழமை)  கருத்து கேட்கவுள்ளது.

இதன்படி புதிய கல்விக்கொள்கை குறித்த தங்களின் நிலைப்பாட்டை காலை 9.30 மணிமுதல் ஒன்லைன் மூலம் தெரிவிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையை அமுல்படுத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகள், கல்வியாளர்களிடம் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வி துறை சார்பில் தனித்தனியே நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உயர் கல்வி நிபுணர் குழுவினர் தமிழகத்தில் உள்ள பல்கலை துணை வேந்தர்களிடம்  நேற்று முன்தினம் கருத்து கேட்டிருந்தனர். இதனையடுத்து இன்று மாணவர்கள், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.