தங்களது வான் எல்லை வழியாக இஸ்ரேல் விமானங்கள் செல்வதற்கு பஹ்ரைன் அனுமதி!

 


இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரக உறவு வலுவடைந்துள்ள நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் விமானங்கள் தங்களது வான் எல்லை வழியாகச் செல்வதற்கு பஹ்ரைன் அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து பஹ்ரைன் அரசுச் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வரும் விமானங்கள் மற்றும் அந்த நாட்டிலிருந்து புறப்படும் விமானங்கள் அனைத்தும் பஹ்ரைன் வான் வழியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அந்த அறிக்கையில் இஸ்ரேலின் பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. அண்டை நாடான சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகம் வந்து செல்லும் இஸ்ரேல் விமானங்களை தங்களது வான் எல்லைக்குள் அனுமதிக்கவிருப்பதாக மறைமுகமாகத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பஹ்ரைனும் அதே போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இருநாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானதன் பின்னணியில், கடந்த 31ஆம் திகதி இஸ்ரேல் நாட்டில் இருந்து அமீரகத்திற்கு முதல் நேரடி வணிக விமானம் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.