தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை


நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி களுத்துறை , கேகாலை , நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் குறித்த மாவட்டங்களில் அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகிய காரணத்தினாலேயே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.