20 A மூலம் ஜனாதிபதிக்கு புதிய அதிகாரங்கள் கிடைக்காது – மஹிந்த!!


 20 ஆவது திருத்த சட்டமூலத்தை ஊடாக ஜனாதிபதிக்கு எவ்வித புதிய அதிகாரமும் வழங்கப்படாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக தற்காலியத் தீர்வைத்தான் வழங்கவுள்ளது என்றும் இது ஒன்றும் புதிய விடயமல்ல எனவும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதிக்கு இதன் ஊடாக புதிதாக எந்தவொரு அதிகாரமும் வராது என்றும் மாறாக, கடந்த கால ஜனாதிபதிகளுக்கு எந்த அதிகாரங்கள் இருந்தனவோ அவை தான் கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இவை அனைத்தையும் மாற்றியமைத்து புதிய அரசியலமைப்பை கொண்டுவருவோம் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.