ரணில் மற்றும் ஹக்கீம் விசாரணை ஆணைக்குழுக்களில் முன்னிலை!!

 


அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகியுள்ளார்.

சாட்சியம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே அவர் முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் அண்மைய நாள்களில் குறித்த பொலிஸ் பிரிவில் வாக்குமூலமளித்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colom

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.