விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் – மருத்துவமனை அறிக்கை!!

 


கொரோனா அறிகுறி இல்லாததால் விரைவில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் வீடு திரும்புவார்  என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த்திற்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்ததையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இதற்கிடையில் விஜயகாந்தின் மனைவியும் தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கு கடந்த இரு தினங்களாக காய்ச்சல், சளி தொல்லை இருந்தது.

இதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கும் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் இன்று (செவ்வாய்டக்கிழமை) அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “விஜயகாந்தின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் விஜயகாந்த்துக்கு நோய் தொற்று அறிகுறி இல்லை என்றும் விரைவில் அவர் வீடு திரும்புவார்.

மேலும் கொரோனா பாதிப்புக்குள்ளான பிரேமலதா விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது” என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.