விஜயகாந்த் குறித்து முக்கிய தகவல்!

 


தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் குறித்து தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதிஷ் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக சில தினங்களுக்கு முன் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து, செப்டம்பர் 22 அன்று விஜயகாந்துக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அவரின் உடல்நிலை சீராக உள்ளது மற்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என கடந்த 24ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

விஜயகாந்த் தற்போது பூரண உடல் நலத்துடன் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அவரது மனைவி பிரேமலதா அன்றே பேட்டியளித்திருந்தார்.

கொரோனா தொற்று ஆரம்ப அறிகுறியுடன் இருந்ததால் தற்போது அவர் நலமாகவும், ஆரோக்கியத்துடன் உள்ளார் என தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்புவார் என தேமுதிக துணைச் செயலாளர் சுதிஷ் தகவல் தெரிவித்துள்ளார். இத்தகவல் தேமுதிக கட்சியினருக்கு மிகுந்த மகிழச்சியை அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.