புதையல் தோண்டிய குற்றசாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 8 பேர் கைது


வவுனியா- பூவரசங்குளம், அரபாநகர் பகுதியில் புதையல்தோண்ட முற்பட்ட 8 பேரை பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) காலை, அரபாநகர் பகுதியிலுள்ள காணியொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த தகவலுக்கமைய அப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பினை பொலிஸார் மேற்கொண்டபோதே குறித்த 8 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, வவுனியா உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தும் மண்வெட்டி உட்பட சிலபொருட்களையும் இரண்டு சொகுசு கார்களையும் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றி வருவதாகவும் அவர்கள் அனைவரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் கூறியுள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.