கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் மேலும் அதிகரிப்பு!!

 


கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 102 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 883 ஆக பதிவாகியுள்ளது.

அத்தோடு, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 207 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பதோடு, இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colom

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.