ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மக்களுக்கும் எமக்கும் பாரிய இழப்பு – சஜித்!

 


அமரர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு, அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களுக்கும் தமக்கும் பாரிய இழப்பு என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அமரர் ஆறுமுகன் தொண்டமானின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் எனது தந்தையோடு நல்லுறவைப் பேணினார்.

இதனால் அப்போதிருந்த அரசாங்கத்தால் பிரஜாவுரிமை இழக்கப்பட்ட ஒரு இலட்சம் தோட்டத் தொழிலாளர்களுக்கும் மீண்டும் பிரஜாவுரிமை வழங்குவதற்கு முடிந்தது.

எந்தவொரு நேரத்திலும், மக்களின் பிரச்சினைக்காக முன்னிலையாகி அப்பிரச்சினைகளுக்காக தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.

அவரது திடீர் இழப்பு, அவர் பிரிதிநிதித்துவப்படுத்திய மக்களுக்கும் எமக்கும் பாரிய இழப்பு. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.