இந்தியா- சீனாவுக்கு எல்லை விவகாரத்தில் உதவத்தயார்- அமெரிக்கா!!
எல்லைப் பிரச்சினை விவகாரத்தில், இந்தியா- சீனா ஆகிய இருநாடுகளுக்கும் உதவுவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சீன இராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதை இந்திய இராணுவம் முறியடித்து வருகிறது.
இதனால் இந்திய – சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகின்றது.
இந்நிலையிலேயே இந்தியா- சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையில் இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை மிகவும் மோசமாக உள்ளது.
சீனர்கள் எல்லைப் பிரச்சினையில் மிகவும் வலுவாக செல்கின்றனர். ஆகவே, சீனா- இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினையில் உதவ தயாராக இருக்கிறோம்.
இருநாடுகளிடமும் இது பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை