சகல உரிமையும் பிரேமலால் ஜயசேகரவிற்கு உள்ளது – சபாநாயகர்!!
மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பிரேமலால் ஜயசேகர தெரிவாகியுள்ளார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள சகல உரிமையும் அவருக்கும் உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அரசியலமைப்பின் குறித்த சரத்தை சபையில் வாசித்துக் காட்டி சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான பிரேமலால் ஜயசேகர எதிர்க்கட்சியின் கடுமையான ஆட்சேபனைக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அனுமதியின் அடிப்படையில் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்தார்.
இந்த நிலையில் இதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இதனால் நேற்றைய அமர்வின்போது பிரேமலால் ஜயசேகரவின் பதவி பிரமாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கருப்பு பட்டியையும் அணிந்திருந்தனர்.
அத்தோடு, நாடாளுமன்ற அமர்வில் இருந்து அவர்கள் வௌிநடப்பு செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை