மைத்திரி, கொழும்பு துணை ஆயர்களை நாளை ஆணைக்குழுவில் முன்னிலையாக உத்தரவு!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை (24) முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் தனி செயலாளருக்கும், கொழும்பின் மூன்று துணை ஆயர்களுக்கும் நாளை காலை ஆணைக்குழுவில் முன்னிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வௌயிட்ட அறிக்கைகள் ஆணைக்குழுவை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் அறிக்கைகளை பதிவு செய்ய முன்னாள் ஜனாதிபதியும் மற்ற மூன்று நபர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆணைக்குழுவில் அளித்த அறிக்கை தவறானது என்று மைத்ரிபால சிறிசேனாவின் தனிசெயலாளர் ஞாயிற்றுக்கிழமை (20) ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஆணைக்குழுவில் அளித்த அறிக்கை தவறானது என கொழும்பின் மூன்று துணை ஆயர்களும் ஒரே நாளில் அறிக்கையை வெளியிட்டனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை