இஸ்ரேலுக்கு அரசாங்கம் மட்டுமே தொழிலாளர்களை அனுப்பும்- நிமல்!!

 


அரசாங்கம் மட்டுமே தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு இனிமேல் அனுப்பும் என அமைச்சர் நிமல் சிரிபாலா டி சில்வா தெரிவித்துள்ளார்.


இஸ்ரேல் அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் எட்டப்பட்ட இராஜதந்திர ஒப்பந்தத்திற்கமையவே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இவ்விடயம் தொடர்பாக நிமல் சிரிபாலா டி சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “இஸ்ரேலில் உள்நாட்டு தாதிகள் மற்றும் வேளாண் துறைகளில் வேலைவாய்ப்புக்காக இலங்கையிலிருந்து தனியார் துறையால் அண்மையில் பலர் அனுப்பப்பட்டனர்.


இவ்வாறு அனுப்பப்படுபவர்களிடம் இருந்து இலங்கை வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள், பெரும் தொகையை வசூலிக்கின்றன என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது.


இந்நிலையிலேயே  இஸ்ரேல் அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் எட்டப்பட்ட இராஜதந்திர ஒப்பந்தத்திற்கமைய, எந்தவொரு தனியார் நிறுவனமும் எதிர்காலத்தில் இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப முடியாது.


எனவே, இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவது தொடர்பான பிரசாரத்தால் ஏமாற வேண்டாம் என்று, பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இந்த விடயத்தில் ஊடகங்களும் கவனம் செலுத்தும் என்று நாம் நம்புகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.