சுந்தர் சியின் அடுத்த படத்தில் மூன்று ஹீரோக்கள்!!

 


பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கி வரும் ’அரண்மனை 3’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சுந்தர் சி தயாரிப்பில் கன்னட படம் ஒன்றின் ரீமேக் ஒன்று தயாராக உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். கன்னட மொழியில் சூப்பர் ஹிட்டான ’மாயாபஜார் 2016’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படத்தை சுந்தர் சி தயாரிக்கவிருப்பதாகவும், இந்த படத்தை அவருடைய இணை இயக்குனர் பத்ரி என்பவர் இயக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது

இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம் இன்று இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கி உள்ளது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது


பிரசன்னா, ஷாம், அசோக் செல்வன் ஆகிய மூன்று ஹீரோக்கள் நடிக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். ஸ்ருதி என்பவர் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கின்றார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.