நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB வழங்க திட்டம்!!

 


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB வழங்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் எழுத்து மூலமாக இதுவரை வழங்கப்பட்டு வருகின்றன.


இதனால் வீண் பணச்செலவு ஏற்படுவதுடன் நேரமும் வீண் விரயமாவதாக பாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேசையில் இத்தகைய ஆவணங்கள் குவிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் ஏனைய நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB வழங்கப்படுவதால், நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குப்பத்திரம் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் இதனூடாக வழங்க முடியும் என அவர் கூறியுள்ளார்.


மேலும் TAB வழங்கப்படுவதன் மூலம் அனைத்து ஆவணங்களையும் மின்னஞ்சல் மூலம் இலகுவாக அனுப்ப முடியும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.