விஜய்சேதுபதி-டாப்ஸி படம் குறித்த ஆச்சரிய தகவல்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை டாப்சி ஆகிய இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த திரைப்படத்தை பழம்பெரும் இயக்குநர் சுந்தர்ராஜன் அவர்களின் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் ராதிகா உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி விஜய்சேதுபதி, டாப்ஸி ஆகிய இருவருமே இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை பீரியட் மற்றும் சமகாலத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்றும் இரண்டு காலங்களிலும் விஜய்சேதுபதி மற்றும் டாப்சி ஆகிய இருவரும் இரண்டு வேடங்களில் நடித்து உள்ளனர் என்றும் செய்திகள் கசிந்துள்ளது
விஜய் சேதுபதி ஏற்கனவே ’சங்கத்தமிழன்’ என்ற படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்பதும் டாப்ஸி தற்போது நடித்துக்கொண்டிருக்கும் இந்தி படமான ‘சையா ஜியா’ என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய்சேதுபதி, டாப்ஸி ஆகிய இருவருமே இரண்டாவது முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கும் படம்தான் இந்த படம் என்பது ஒரு ஆச்சரியமான ஒற்றுமை.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை