விடுதிகளிலேயே அதிகமாக கொரோனா தொற்று பரவியுள்ளது – அவசர எச்சரிக்கை!!

 


நாட்டின் ஏனைய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளைச் சேர்ந்த ஊழியர்களுடன் பிரன்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் ஒரே விடுதியில் தங்கியிருப்பதாலேயே கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவுகின்றது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எனவே ஏனைய ஆடைதொழிற்சாலை தொழிலாளர்களுடன் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் மாற்றுவழிகள் குறித்து சிந்திக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் பல ஆடைதொழிற்சாலைகள் காணப்படுகின்றன என தெரிவித்துள்ள அவர், பல தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒரே விடுதியில் தங்கியிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பல தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஒரே விடுதியில் தங்கியிருப்பதால் ஏனைய தொழிற்சாலைகளுக்கும் கொரோனா பரவும் ஆபத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு ஒரே விடுதியில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.