மேலும் 29 பேர் இன்று நாடு திரும்பினர்!!

 


நிலவும் கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 29 பேர் நாடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி கட்டார் மற்றும் டோஹாவில் இருந்து 29 பேர் இன்று (சனிக்கிழமை) QR 668 விமானத்தில் நாடு திரும்பியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இவர்களுக்கு விமான நிலைய வளாகத்திற்குள் பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.


நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக இலங்கையர்களை திருப்பி அனுப்புவதை தற்காலிகமாக தாமதப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.