இலங்கையில் 4 இலட்சம் பி.சி.ஆர். பரிசோதனை!


இலங்கையில் இதுவரை 4 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் தொற்றுநோயியல் பணியகத்தினால் 8 ஆயிரத்து 270 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 6 ஆயிரத்து 466 ஆக உள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 5811 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.