அர்மீனியா - அசர்பைஜானுடன் போர்நிறுத்தத்தை எட்ட இணக்கம்!
அசர்பைஜானுடன் போர்நிறுத்தத்தை எட்ட சர்வதேச மத்தியஸ்தர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அர்மீனியா தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் ஆறாவது நாளாகவும் கடுமையான மோதல்கள் இடம்பெற்றும் வரும் நிலையில், போர்நிறுத்த ஆட்சியை மீண்டும் ஸ்தாபிப்பதற்காக மோதலுக்கு ஓ.எஸ்.சி.இ குழுவின் மத்தியஸ்தர்களாக இருக்கும் பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அர்மீனியா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிந்து சென்ற நர்கோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் உள்ள அர்மீனிய அதிகாரிகள், அர்மீனிய ஆதரவு துருப்புக்களிடையே மேலும் 54 இராணுவ உயிரிழப்புகளைப் உறுதிசெய்ததையடுத்து படையினரின் இறப்பு எண்ணிக்கை 158ஆக அதிகரித்துள்ளது.
எனினும், அசர்பைஜான் எந்தவொரு இராணுவ உயிரிழப்புகளையும் தெரிவிக்கவில்லை, ஆனால் அர்மீனிய ஷெல் தாக்குதலில் 19 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்மீனியா-அசர்பைஜான் இடையே அமைதியை ஏற்படுத்த 1992ஆம் ஆண்டு ஓ.எஸ்.சி.இ மின்ஸ்க் குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த குழுவின் தலைமைகளாக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
தற்போது அர்மீனிய-அசர்பைஜான் மோதல் அதிகரித்து வரும் நிலையில், இந்த அமைதிக்குழு போரை முடிவுக்குக்கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகளுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.
அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது
அசர்பைஜானில் அமைந்திருந்த இந்த மாகாணத்தில் பெரும்பான்மையானோர் அர்மீனிய ஆதரவாளர்களே ஆகும். 1994ஆம் ஆண்டு இரு நாடுகளும் இடையே நடந்த போரில் இந்த மாகாணத்தின் பெரும் பகுதியை அர்மீனியா கைப்பற்றியது.
மேலும், இந்த நகோர்னோ-கராபத் மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. அன்றிலிருந்து நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாகக்கொண்டு அர்மீனியா-அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை