ஊரடங்கு பகுதிக்கு விசேட அறிவிப்பு!!

 


தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இவற்றினை திறந்து வைத்திருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொருட் கொள்வனவுக்காக வெளியில் செல்லும் போது, ஒரு தடவை மாத்திரம் வெளியில் செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அத்துடன், வீட்டிற்கு அருக்கில் உள்ள வர்தக நிலையங்களுக்கு மாத்திரம் செல்லுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தூரப்பிரதேசங்களுக்கு செல்லும் நபர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு கீழ் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.