இந்தியா-அமெரிக்கா இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!!



 
இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அடிப்படை தகவல் பரிமாற்றம் ஒத்துழைப்பு உட்பட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

இந்திய, அமெரிக்க வெளிவிவகாரத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இடையே கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நேரடி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான 2102 பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் மைக் பொம்பியோவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டாக ஆலோசனை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், இந்தியா – அமெரிக்கா இடையே அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு உட்பட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும் இடையே இராணுவ ரீதியிலான பல்வேறு தகவல்கள், நடவடிக்கைகளை, தொழில்நுட்ப தகவல்களை பகிர சம்பதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்க இராணுவ தரவுகளை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் சீனா, பாகிஸ்தான் நாடுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க இந்தியாவுக்கு உதவியாக இருக்கும். இரு நாட்டு வரைபட தரவுகளையும் பகிர்ந்துகொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கு இடையே இராணுவ ஒப்பந்தங்கள், இராணுவ உபகரணங்கள் வழங்குதல், இரு நாடுகளும் இணைந்து இராணுவ, கடல்பரப்பு, வான் பரப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இணைந்து செயற்படுதல் மற்றும் அது தொடர்பான தகவல்களை பகிர்தல் என பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.