அச்சப்பட வேண்டாம் என்கிறார் ட்ரம்ப்!!
கொரோனா வைரசைக் கண்டு அமெரிக்கர்கள் அச்சப்பட வேண்டாம் என மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மேல் சிகிச்சைக்காக அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய இராணுவ மருத்துமனையில் இருந்து நேற்று (திங்கட்கிழமை) வெளியேறினார்.
இதன்பிறகு வெள்ளை மாளிகை திரும்பிய ட்ரம்ப், வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில் உள்ள ஸ்டேட்லே வெளிப்புற பகுதிக்கு வந்து ஊடகவியலாளருக்கு கை அசைத்தார். இதன்போது தனது முக்கவசத்தை கழற்றி தனது சட்டை பைக்குள் வைத்துக் கொண்டார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது மிக அவசியம் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தும் வகையில், தொற்று பாதித்த ட்ரம்ப் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருந்தது சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை