நன்கு சமைக்கப்பட்ட மீனில் கொரோனா பரவாது - சுகாதார அமைச்சு!!
நாடு முழுவதும் உள்ள மீன் சந்தைகளை மூடவேண்டிய அவசியம் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், நன்கு சமைக்கப்பட்ட மீனில் கொரோனா வைரஸின் தாக்கம் காணப்படாது எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் கடந்த வாரம் பேலியகொட மீன் சந்தையில் பணிபுரிபவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, அங்கு பணிபுரிபவர்கள் மற்றும் அங்கு வந்து சென்றவர்கள் என பலருக்கும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் நாடளாவிய ரீதியில் பல நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்தோடு, தொற்றாளர்களுடன் தொடர்புடைய பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதுடன், பல இடங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை