குணமடைந்தோரின் எண்ணிக்கை 4000 ஐ கடந்தது!!
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 110 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,043 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 8,413 பேரில் 4354 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அத்தோடு 537 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில்உள்ளனர்.
மேலும் இன்று முல்லேரியாவாவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜா-எல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் நாட்டில் கொரோனா தொற்று உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை