205 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பினர்!!

 


கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 205பேர், தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து, இன்று (திங்கட்கிழமை) வீடு திரும்பவுள்ளனர்.

முப்படையினரால் நடத்தப்படும் 4தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 205பேரே இவ்வாறு வெளியேறவுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொற்றுக்கு உள்ளான 2169 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் இந்தத் தொற்றில் இருந்து இதுவரையில் 3 ஆயிரத்து 403 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என்பதுடன், இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.