நோவா ஸ்கோடியா மாகாண அவசரகால நிலை நீடிப்பு!
நோவா ஸ்கோடியாவில் நடைமுறையில் உள்ள மாகாண அவசரகால நிலை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முதன்முதலில் மார்ச் 22ஆம் திகதி அறிவிக்கப்பட்ட மாகாண அவசரகால நிலை, தற்போது கொவிட்-19 தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் நீடிக்கப்பட்டுள்ளது.
நோவா ஸ்கோடியா அரசாங்கம், ஒரு புதிய இணையக் கொவிட்-19 மதிப்பீட்டுக் கருவியை அறிவித்துள்ளது.
கொவிட்-19க்கு சாதகமாக சோதிக்கும் எவரும், 14 நாட்கள், பொதுமக்களிடமிருந்து விலகி, வீட்டிலேயே சுயமாகத் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
அட்லாண்டிக் பிராந்தியத்திற்கு வெளியில் இருந்து நோவா நோவா ஸ்கோடியாவுக்குச் செல்லும் எவரும் 14 நாட்களுக்கு சுயமாகத் தனிமைப்படுத்தப்பட வேண்டும். மேலும், மாகாணத்திற்கு வருவதற்கு முன்பு சுய அறிவிப்பு படிவத்தை நிரப்ப வேண்டும்.
எவ்வாறாயினும், மாகாணத்திற்கு வெளியே சுழற்சி செய்யும் தொழிலாளர்களுக்கு சில சுயத்தனிமை விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மாகாணம் தளர்த்தியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை