6 ஆயிரத்து 648 PCR பரிசோதனைகள் நேற்றைய தினம்!

 


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அடையாளம் காணும் நோக்கில்,  நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) 6 ஆயிரத்து 648 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் இதுவரை மூன்று இலட்சத்து 35 ஆயிரத்து 752 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 10 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து, தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.