மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான சாலைகளையும் நாளைய தினம் மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், நாடளாவிய ரீதியில் 56 மதுவரித் திணைக்கள அலுவலகங்களின் கீழ் 900 உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தி சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை