மீண்டும் சுரேஷ்-அனிதா மோதல்!

 


பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை யாருடனாவது வம்புக்கிழுத்து சண்டை போட்டால் மட்டுமே அவர் முன்னிறுத்தப்படுவார் என்று ஐடியாவை புரிந்துகொண்டுதான் கிட்டத்தட்ட அனைவருமே நான்காவது சீசனில் உள்ளே வந்துள்ளனர் என்பது முதல் நாளே தெரிந்தது.


ஆனால் அதனை முதலில் செயல்படுத்தியவர் அனிதா சம்பத் தான். எதேச்சையாக நியூஸ் ரீடர் குறித்து சுரேஷ் சக்ரவர்த்தி கூறியதை பெரிதுபடுத்தி அவருடன் வம்பு சண்டைக்கு சென்ற அனிதா சம்பத், இன்று மீண்டும் அவருடன் வம்புக்கு இழுக்கிறார்.


நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, இனிமேல் என்னிடம் பேசாதே என்று அனிதா சம்பத்திடம் சுரேஷ் கூறியும் அனிதா விடாமல் அவரைத் தொடர்ந்து வம்புக்கிழுத்து வருகிறார். சுரேஷை சமாதானப்படுத்த முயன்ற ரேகாவிடமும் சுரேஷ் சக்கரவர்த்தி கோபம் அடைகிறார்.


இன்றைய 2-வது புரோமாவிலிருந்து சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் அனிதா சம்பத் இடையே இன்று மீண்டும் ஒரு சம்பவம் இருக்கிறது என்பது உறுதியாகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.