வயோதிப மாது காட்டு யானையின் தாக்குதலில் பலி!!

 


அநுராதபுரத்தில் காட்டு யானையின் தாக்குதலில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் இஹலகம பகுதியில் இச்சம்பவம் நேற்றிரவு (29) இடம்பெற்றுள்ளது.


வீட்டுக்கு அருகில் சத்தம் கேட்டதையடுத்து கதவைத் திறந்து வெளியே செல்ல முற்பட்டபோது முன்னால் நின்ற யானை தூக்கி வீசியதை அடுத்து அவ்விடத்திலேயே அப்பெண் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த பெண் கஹட்டகஸ்திகிலிய-மீமின்னாவல ,இஹலகம பகுதியைச் சேர்ந்த சுத்தாகே விமலாவத்தி (64) என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் சம்பவம் தொடர்பில் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.