கட்டுநாயக்க சுதந்திர வர்த்த வலயத்திற்குட்பட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் முடக்கம்!

 


கட்டுநாயக்க சுதந்திர வர்த்த வலயத்திற்குட்பட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன.

இலங்கை முதலீட்டு சபையின் உயர் அதிகாரி ஒருவர் இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்த வலயத்திற்குட்பட்ட பகுதியில் தற்போது 85 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

எனினும், போதுமான அளவு ஊழியர்கள் வருகை தராத காரணத்தினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, கட்டுநாயக்கவை அண்மித்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த பகுதிகளில் போக்குவரத்து சேவைகளும் தடைப்பட்டுள்ள நிலையில், பல ஊழியர்கள் சேவைக்கு வருகை தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.