அவளழளகு - கவிதை !!

 


சின்னநிலாப் போல நெற்றிப்பொட்டு -அவள்

சிங்காரித்து வந்தரோசா மொட்டு

வண்ணமயில் அவளழகை 

வர்ணிக்கச் சொல்தேடி

கன்னியவள் மடிமீது விழுந்தேன்   -நான்

கம்பனாக  இப்போது எழுந்தேன்!

கொடி இடையை என்மனமும் ரசிக்கும் -அது

கோடை கால இளநீராய் ருசிக்கும்

நடையழகும் உடையழகும்

நடுவிலிருக்கும் இடையழகும்

படைதிரட்டி வந்தென்னைத் தாக்கும் - மனப்

பைக்குள்ளே காதல் பூக்கும்!

நாவசைத்தால் செந்தமிழும் இனிக்கும் 

- அவள் 

நாணம்தான் என்சூட்டைத் தணிக்கும்

பாவையவள் எனக்குள்ளே

பாரமின்றி விழுந்துவிட்டாள்

நாவில்விழுந்த மலைத்தேனின் சொட்டாய் -அவள்

நான்சுவைக்கும் ஆரஞ்சு மிட்டாய்!

வெட்டருவா போலிருக்கும் புருவம் - அவள்

விழியாலே வீழ்த்துகின்ற பருவம்

மொட்டவிழ்ந்து பூவாகி

முகம் மலர்ந்து வந்தவளின்

கட்டழகில் இருக்கிறது சொர்க்கம் - அவள்

கண்ணசைவில் இப்புவியும் நிற்கும்!

                  """""'""'""""''’"''""

                               க. சித்தார்த்தன்


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.