படைகளை திரும்பப் பெறுமாறு இந்தியா வலியுறுத்து!

 


இந்தியா – சீனாவிற்கு இடையிலான பதற்றத்தை தணிக்கும் வகையில் படைகளை திரும்பப் பெறுமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது. இராணுவ பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போதே மேற்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது  பாங்கோங் த்சோ ஏரியின் கரையிலிருந்தும்,  லடாக்கில் உள்ள பிற மோதல் பகுதிகளில் இருந்தும் சீன படைகளை  திரும்பப் பெறுமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில்  லடாக் நிலைப்பாட்டிற்கு முன்கூட்டியே தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் குறைவாக தென்பட்டுள்ளதால் சுமார் ஒரு இலட்சம் இந்திய மற்றும் சீன வீரர்கள் எல்லைப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ரெச்சின் லா,  ரெசாங் லா,  முக்பாரி,  மற்றும் டேப்லெட் போன்ற முக்கியமான மலை உயரங்களிலும் பாங்காங் ஏரியின் தென் கரையிலும் இந்தியா தனது நிலைகளை உயர்த்தியுள்ளது.

பாங்கோங் த்சோவில் சீனா ‘ஆத்திரமூட்டும் இராணுவ நடவடிக்கைகளை’ மேற்கொண்ட பின்னர் மேற்கூறிய முக்கிய பகுதிகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.