கிணறுலிருந்து துப்பாக்கி, ரவைகள் மீட்பு!



அம்பாறை அக்கரைப்பற்று பஸ்டிப்போ வீதியில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து ஒரு ரி 81 ரக துப்பாக்கி 30 ரவைகள் என்பவற்றை இன்று தேசிய புலனாய்வு பிரிவினர் மீட்டு அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தேசிய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான இன்று  அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சாலைக்கு பின்பகுதியிலுள்ள பஸ்டிப்போ வீதியில் வெற்றுக் காணி ஒன்றில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பொலித்தீன் பையினால்  சுற்றப்பட்ட நிலையில் ரி 81 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான 30 ரவைகள், மகசீன் ஒன்றையும் மீட்டனர் 

இதில் மீட்கப்பட்ட துப்பாக்கியை அக்கரைப்பற்று பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் .


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.