ஊரடங்கு அமுலிலுள்ள முக்கிய அறிவித்தல்!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள உயர்தர மாணவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், வீண் குழப்பமடைய தேவையில்லையெனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அவர்கள் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப பரீட்சைகளில் கலந்துகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை