மாரவில பகுதியில் மீனவர் ஒருவருக்கு கொரோனா!!

 


மாரவில பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் டிகோவிட்ட மீன்வள துறைமுகத்தை மூடுவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி குறித்த மீனவர், தொழிலுக்காக கடலுக்கு சென்றுள்ளார். இதன்போது, அவருடன் 5 மீனவர்கள் படகில் இருந்துள்ளனர்.

குறித்த மீனவருக்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டமையினால், ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, அவருக்கு கொரோனா வைரஸ்  தொற்று உள்ளதா என்ற பீ.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பீ.சி.ஆர்.பரிசோதனையின் முடிவு இன்று வெளியிடப்பட்டபோதே, குறித்த மீனவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.