இலங்கைக்கு மோசமான ஒப்பந்தங்களை சீனாவே கொண்டுவந்தது – மைக் பொம்பியோ


இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் மோசமான ஒப்பந்தங்களை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுவந்துள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த பின்னர் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

சீனாவே இலங்கையின் இறையாண்மையை மீறும் வகையில் நிலம் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளை ஆக்கிரமிப்பதற்காக மோசமான ஒப்பந்தங்களை மேற்கொண்டதாக மைக் பொம்பியோ கூறினார்.

ஆனால் அமெரிக்கா உறவுகளை வலுப்படுத்தவும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவினை வளர்க்கவும் அபிவிருத்தி குறித்த நோக்குடனும் செயற்படுவதாகவும் மைக் பொம்பியோ குற்றம்சாட்டினார்.

ஜனநாயகத்தை மதிக்கும் ஒரு நாடு என்ற வகையில், எங்களுக்கும் அதே பார்வை இருக்கிறது என்றும் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை மக்கள் வெற்றி பெறுவதையும், இறையாண்மையையும் சுதந்திரத்தையும் அனுபவித்து, நிலையான வளர்ச்சியை அடைவதே அமெரிக்காவின் இலட்சியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இலங்கை நடுநிலையாக செயற்படும் ஒரு நாடு என்பதனால் அமெரிக்கா உட்பட அனைத்து நட்பு நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படும் என குறிப்பிட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.